இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம் திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின் சிறப்பைச் சொல்வார்கள். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதமிருந்து திருமாலை வழிபடுவது பூர்வ ஜென்ம வினைகளைப் பூண்டோடு ஒழிக்கும்.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும். அனேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருவோண சிறப்பு வழிபாடுகளும் திருமஞ்சனமும் நடைபெறும். சில கோயில்களில் உள் பிரகாரப் புறப்பாடும் உண்டு.
இன்றைய தினம் காலை எழுந்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு திருவோண விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் மாலையில் துளசி மாலையோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பாலோ பழமோ நிவேதனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
இன்று போதாயன அமாவாசை நாளும் கூட என்பதால் இரண்டும் சேர்ந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்
மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைக்கும் .திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ் வர்யங்களும் பெருகும்.நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மண வாழ்வு அமையும்.
